புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தினமும் 10 லிட்டர் அளவுக்கு கோகாகலா குளிர்பானத்தை குடித்த பெண் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் நடஷா ஹாரிஸ்(வயது 30). எட்டு குழந்தைகளுக்கு தாயான இவர், காலை
எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை அடிக்கடி,



கோககோலா குளிர்பானத்தை பருகி வந்தார்.

ஒரு நாளைக்கு 10 லிட்டர் கோககோலாவை இவர் பல ஆண்டுகளாக குடித்து வந்தார். இதற்கிடையே அவர் கடந்த 2010ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார்.இவர் திடீரென இறந்ததற்கான காரணம் குறித்து பல்வேறு துறை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். நடஷாவின் கணவரை அழைத்து அவரது மனைவி என்னென்ன உணவு பழக்கங்களை கொண்டிருந்தார் என கேட்டனர்.

நடஷா ஒரு நாளைக்கு எட்டு முதல் 10 லிட்டர் கோககோலா குடித்ததாகவும், 30 சிகரெட் வரை பயன்படுத்தியதாகவும், ஆனால் குறைவான உணவு மட்டுமே உட்கொண்டு வந்ததாகவும் நடஷாவின் கணவர் கூறினார்.
சமீபத்தில் நடஷாவின் மரணம் குறித்த மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தண்ணீராக இருந்தாலும் அது அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உடலுக்கு கெடுதலை தான் செய்யும். அதிகப்படியான கோககோலாவினால் அவரது உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்து விட்டது.

இதனால் அவருக்கு ரத்த அழுத்தமும், சக்தி குறைவும் ஏற்பட்டுள்ளது. இது தான் அவருக்கு மரணத்தை ஏற்படுத்தி விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோககோலா நிறுவனம் தங்களுடைய குளிர்பானம் மிகவும் பாதுகாப்பானது என அறிக்கை அளித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top