புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிறந்து ஏழே மாதமான பிஞ்சு குழந்தை அழுகையை நிறுத்தவில்லை என்பதற்காக, தாயினால் குழந்தை கொதிக்கும் நீரில் இடப்பட்ட சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த புதன் கிழமை இடம்பெற்றுள்ளது.ஷெகேலா ஏரியல் டம்பிஜர் என்ற 18 வயதாகும் இளம் தாயாலேயே
குறித்த குழந்தை சுடுநீரில் அவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை அழுவதை நிறுத்தாத காரணத்தால் கோபப்பட்ட குறித்த பெண், குழந்தையை சுடுநீர் நிரப்பப்பட்ட கொள்கலனில் தூக்கிப் போட்டுள்ளார்.உடல் கொப்பளித்த நிளையில் அயலவர்களில் தகவல் அடிப்படையில் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தை வதை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த பெண், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 150000அமெரிக்க டொலெர்கள் சரீதப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top