புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கேரள மாநிலம் எர்ணாகுளம் கும்பழை பகுதியை சேர்ந்தவர் சாம்சன். இவருடைய மனைவி மேழ்சி ( 33). இவர்களுக்கு சொந்தமான வீடு அங்குள்ள ஒரு தோட்டத்தின் நடுவே அமைந்துள்ளது. இந்த நிலையில் மேழ்சி தினமும் வீட்டிற்கு வெளியே உள்ள குளியல் அறையில் குளிப்பது வழக்கம்.

இதனை அதே பகுதியை சேர்ந்த ஜோசப் (75) என்பவர் அடிக்கடி மறைந்து இருந்து ரசித்து வந்தார். வழக்கம்போல நேற்று மாலை வீட்டு வேலைகளை முடித்து விட்டு மேழ்சி குளியல் அறைக்கு சென்றார். இதை மறைந்து நின்ற கவனித்த முதியவர் ஜோசப்பை அவர் பார்த்து விட்டார். இதனால் அவரை கண்டித்தார்.

மேலும் கணவர் சாம்சனிடமும் இதுபற்றி கூறினார். உடனே அவர் முதியவர் ஜோசப்பை எச்சரித்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது முதியவர் ஜோசப் தன்னிடம் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மேழ்சியை நோக்கி சுட்டார். இதில் அவருடைய கன்னத்தில் குண்டுபாய்ந்தது. மயங்கி விழுந்த அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பழை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோசப்பை கைது செய்து அவரிடம் இருந்த கைத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top