செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த 7 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இன்று அதிகாலை 3.40 அளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
சந்தேக நபர்கள் உலுக்குளம், மொரட்டுவை, பன்னிப்பிட்டி மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இவர்களை வவுனியா நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக