புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புலம்பெயர்ந்து வேறு நாட்டில் குடியேறுவதற்காக சென்ற 18 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.துருக்கி நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியிலிருந்து 28 பேர் சிறிய படகில் கடந்த 13ஆம்
திகதி புறப்பட்டனர்.

அப்போது மோசமான வானிலை காரணமாக, படகு திடீரென கடலில் மூழ்கியது.

பயணம் செய்தவர்களில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், இவர்களின் சடலம் ஜெஸ்பாஸ் தீவில் மித்திலினி நகர் கடற்கரையில் கதை ஒதுங்கியது.

மீதமுள்ள 10 பேரில் ஒருவர் மட்டும் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், மற்றவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

இது குறித்து பொலிஸ் அதிகாரிகள், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக துருக்கியிலிருந்து ஏராளமானவர்கள் பயணம் செய்கின்றனர். குறிப்பாக குளிர்காலங்களில் இவ்வாறு பயணம் செய்யும் போது, மோசமான வானிலை காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top