
ஆலயத்தின் பிரதான கதவை உடைத்துச் சென்ற திருடர்கள் அங்கிருந்த பெறுமதி மிக்க பொருட்களையும் ஆலய உண்டியலையும் உடைத்துச் சென்றுள்ளனர். இப் பகுதியில் கடந்த சில நாட்களாக பல வீடுகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. இவை தொடர்பாக இளவாலைப் பொலிசாரிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கைகளும் பொலிசார் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.