புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பில் பாதுகாப்பான ரயில் கடவை இல்லாததினால் ரயிலுடன் பஸ் மோதிய சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.


மட்டக்களப்பு கூழாவடிச் சந்தியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையினால் கடக்க முற்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பயணிகள் பஸ்வண்டி மோதிய சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

இன்று காலை 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாமாங்கம் கூழாவடிச் சந்தியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையினால் கடக்க பஸ்வண்டி முற்பட்ட போது கொழும்பு இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த ரயில் மோதியதில் பஸ்வண்டியின் பின்புறம் சேதமடைந்ததுடன் பஸ்வண்டியில் பயணம் செய்த பெண் ஒருவரும் சிறிய காயத்துக்குள்ளாகியுள்ளார்.

மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் பல காணப்படுவதனால் ஏற்கனவே இவ்வாறான பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.



இவ் ரயில் கடவைக்கு பாதுகாப்பை ஏற்படுத்த சம்பந்தப்பட்டோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பவ இடத்தில் கூடியிருந்த மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

பாதுகாப்பான ரயில் கடவையினை ஏற்படுத்துவது தொடர்பாக மட்டக்களப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தடவைகள் எடுததுரைக்கப்பட்டபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் விசனம் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top