புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


எரிபொருள் விலை உயர்வினால் மின்சார சபை எதிர்கொண்டுள்ள பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வகையில் தற்காலிகமாக மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சக்தி, எரிசக்தி
அமைச்சு உத்தேசித்துள்ளது.  ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
மின்சார சபை உத்தேசித்துள்ள புதிய கட்டண அதிகரிப்பின் படி மாதாந்த நிலையான கட்டணம் மாற்றப்படமாட்டாது.

முதல் 30 அலகுகளுக்கான கட்டணம் 3 ரூபாவில் இருந்து 5 ரூபாவாகவும், 60 அலகு வரையான கட்டணம் 4 ரூபா 70 சதத்திலிருந்து 6 ரூபாவாகவும் உயர்த்தப்படுகிறது.

90 அலகுகளுக்கான கட்டணம் ஒவ்வொரு அலகிற்கும் தலா ஒரு ரூபாவினாலும் அதிகரிக்கிறது.

120 அலகுகள் வரையான கட்டணம் தலா 6 ரூபா வினாலும் 180 அலகுகள் வரையான கட்டணம் 4 ரூபாவினாலும் 210 அலகுகள் வரையான கட்டணம் எட்டு ரூபாவினாலும் குறைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண திருத்தத்தில் மதஸ்தலங்கள், பாடசாலைகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும் அறிய வருகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top