புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



சனிக்கோள் பூமிக்கு அருகில் வர உள்ளது. இந்நிகழ்வு, ஏப்ரல் 28ஆம் திகதி நிகழ உள்ளது.


சூரிய குடும்பத்தில் ஒரு அங்கம், சனிக்கோள். சூரியனுக்கு அருகில், சனிக்கோள் வரும் போது, அதை பார்க்க முடியும். வரும், 28ம் திகதி, சூரியனுக்கு எதிராக சனிக்கோள் வருகிறது.

சாதாரணமாக, பூமி, சனி இடையே உள்ள தூரம், 142.7 கோடி கி.மீட்டர். சில நேரங்களில், சனிக்கோள், பூமியிலிருந்து, 125 கோடி கி.மீட்டர் தூரத்திற்கு வரும்.

தற்போது, சூரியனுக்கு எதிராக, சனிக்கோள் வருகிற நேரத்தில், பூமியில் இருந்து, 132.2 கோடி கி.மீட்டர் தூரத்தில் இருக்கும். இந்த நிகழ்வின் போது, சனிக்கோள், அதன் துணை கோள்கள் மற்றும் சனிக்கோளின் வளைவுகளை பார்க்க முடியும்.

கடந்த ஆண்டு, ஏப்ரல் 4ம் திகதி, அதுபோல், சனிக்கோள் பூமிக்கு அருகில் வந்தது.

எதிர்வரும் 28ம் திகதி முதல், 12 நாள்கள் இந்த நிகழ்வு தொடரும்.

வெறும் கண்ணால் இந்நிகழ்வை பார்க்கலாம். ஆனால், பிரகாசமான பொருளாக தான் சனிக்கோள் தெரியும்.

சனிக்கோளின் உட்கூறுகள் போன்றவற்றை, தொலைநோக்கியில் தான் பார்க்க முடியும்.

இது போன்ற நிகழ்வு, மீண்டும், 2014, மே, 10ம் திகதி, நடைபெற உள்ளது.

சனிக்கோள், பூமிக்கு அருகில் வருவதால், எந்தவித பாதிப்பும் கிடையாது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top