புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஐபிஎல் 6வது தொடரில் சென்னையில் நடைபெற்ற 38வது லீக் போட்டியில் கடைசி ஓவர் பரபரப்பில் 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி
வீழ்த்தி வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் காம்பீர், பீல்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது.
முரளி விஜய்க்குப் பதில் ஷாகா
கடந்த பல போட்டிகளில் பெருமளவு சோபிக்காமல் போன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான முரளி விஜய் இன்றைய போட்டியில் நீக்கப்பட்டு வருக்குப் பதில் விர்திமான் ஷாகா சேர்க்கப்பட்டார். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக விர்திமான் ஷாகாவும் நல்ல பார்மில் இருக்கக் கூடிய மைக் ஹசியும் களம் இற்ங்கினர். கொல்கத்தாவின் யூசுப் ஃப்தான் முதல் ஓவரை வீசினார்.

சென்னை நிலையான தொடக்கம்

முதல் ஓவரில் பதானின் முதல் பந்தில் ஷாகா ரன் எடுக்கவில்லை. ஆனால் அதற்கடுத்த பந்தில் ஷாகா ஒரு ரன் அடிக்க பின்னர் மைக் ஹசி பதானின் பந்துகளை எதிர்கொண்டார். இந்த ஓவரின் முடிவில் 6 ரன்கள் எடுக்கப்பட்டது. 2வது ஓவரை ஷமி அகமத் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்துகளை எதிர்கொண்ட ஹசி எந்த ஒரு ரன்னையும் எடுக்க முடியவில்லை. ஆனால் 4வது பந்தை அழகாக பவுண்டரிக்குத் தள்ளிவிட்டார் ஹசி. இன்றைய போட்டியின் முதல் பவுண்டரி இது. 2வது ஓவரின் முடிவில் 11 ரன்களை எடுத்தது சென்னை அணி. ஹசி 10 பந்துகளில் 10 ரன்களையும் ஷாகா 2 பந்தில் 1 ரன்னையும் எடுத்திருந்தனர். 3வது ஓவரை லக்ஷ்மிபதி பாலாஜி வீசினார். இவரது ஓவரின் 3,4 வது பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரிகளுக்கு அனுப்பி வைத்தார் ஹசி. 5வது பந்தில் ரன் அடிக்காவிட்டாலும் கடைசி பந்தை மீண்டும் பவுண்டரிக்குத் தட்டி விட்டு சென்னை ரசிகர்களை துள்ள வைத்தார் ஹசி. 3வது ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 ரன்களை எட்டியது. 16 பந்துகளில் ஹசி 24 ரன்களை எட்டியிருந்தார்.சாந்தை இணையம்

ஹசி- ஷாகாவின் அபாரம்

4வது ஓவரை மீண்டும் ஷமி அகமது வீசினார். ஷமி அகமதின் 2,3வது பந்துகளை அடுத்தடுத்து ஷாகா பவுண்டரிகளுக்குத் தட்டிவிட்டார்.ஷமி அகமதின் கடைசி பந்தையும் அழகாக தூக்கி அடித்தார் ஷாகா. அது மிகச்சரியாக பவுண்டரி லைனுக்கு வெளியே விழ இன்றைய போட்டியின் முதலாவது சிக்சரை பதிவு செய்தார். இந்த ஓவரில் மட்டும் 15 ரன்களை சென்னை அணி குவித்தது. 4வது ஓவரின் முடிவில் சென்னை அணி 40 ரன்களைக் குவித்து நல்ல தொடக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. 5வது ஓவரை சுனில் நரின் வீசினார். இந்த ஓவரின் 2,3வது பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரிக்கு அடித்து விரட்டினார் ஹசி. இந்த ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்களை எடுத்திருந்தது. 6வது ஓவரை காலிஸ் வீசியிருந்தார். அவரது முதலாவது பந்தை ஹசி பவுண்டரிக்கும் 3,வது பந்தை ஷாகா பவுண்டரிக்கும் அனுப்பி பதம் பார்த்தனர். 4வது பந்தை ஷாகா சூப்பர் சிக்சருக்குப் பறக்கவிட்டார். இந்தஓவரின் முடிவில் 67 ரன்களைக் குவித்திருந்தது சென்னை அணி. ஷாகா 11 பந்துகளில் 26 ரன்களையும் ஹசி 25 பந்துகளில் 40 ரன்களையும் எடுத்திருந்தனர். இருவரும் 36 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்களைக் குவித்திருந்தனர்.

31 பந்தில் மைக் ஹசி அரைசதம்

7வது ஓவரை பாட்டியா வீசினார். இந்த ஓவரில் சென்னை வீரர்கள் அதிரடியாக ரன்களைக் குவிக்க முடியவில்லை. சிங்கிள் ரன்களைத்தான் சேர்க்க முடிந்தது. மொத்தம் 5 ரன்கள் கூடுதலாக எடுத்தனர். 8வது ஓவரை காலிஸ் வீசினார். பாட்டியா ஓவரில் அடிக்க முடியாத குறையை ஹசி இந்த ஓவரில் தீர்த்துக் கொண்டார். காலிஸின் 2வது பந்தை சிக்சருக்குப் பறக்கவிட்டார். ஷாகாவும் விட்டுவைக்கவில்லையே காலிஸின் பந்தை...அவரது 4வது பந்தை பவுண்டரிக்குத் தூக்கி அடித்தார். ஷாகா 16 பந்தில் 34 ரன்களை எட்டியிருந்தார். காலிஸின் கடைசி பந்தை எதிர்கொண்ட ஹசி சிங்கிள் ரன் அடித்து தமது அரை சதத்தை எட்டினார். 31 பந்துகளில் ஹசி 50 ரன்களை எட்டினார். நடப்பு ஐபிஎல் தொடரில் மைக் ஹசியின் 4வது அரை சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 8வது ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 86 ரன்களைக் குவித்தது. 9வது ஓவரை மீண்டும் பாட்டியா வீசினார். முதல் 5 பந்துகளில் நிதானமாக ரன்களை எடுத்துக் கொண்டிருந்தனர் சென்னை வீரர்கள். பாட்டியாவின் கடைசி பந்தை பவுண்டரிக்கு ஹசி தட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது ஓவர் முடிவில் 96 ரன்களைத் தொட்டது. 10வது ஓவரை சுனில்நரின் வீசினார். இவரது 3வது பந்தில் சென்னை அணி 100 ரன்களைக் கடந்தது.. 10 வது ஓவரின் முடிவில் சென்னை அணி 103 ரன்களைக் குவித்தது.

ஷாகா 39 ரன்னில் அவுட்

11வது ஓவரின் முதல் பந்தில் பாட்டியா வீசிய பந்தில் ஷாகா அவுட் ஆனார். அவர் 23 பந்தில் 39 ரன்களை எடுத்திருந்தார். இதில் 2 சிக்சர், 4 பவுண்டரிகள் அடங்கும். களத்தில் 63 ரன்களுடன் இருந்த ஹசியுடன் ரெய்னா இணைந்து கொண்டார். 11வது ஓவரின் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களை எடுத்தது.12வது ஓவரை லக்ஷ்மிபதி பாலாஜி வீசினார். கடந்த சில ஓவர்களில் பவுண்டரிக்கு பந்துகள் போகவில்லையே என்ற குறையை பாலாஜியின் 4வது பந்தில் நிர்வர்த்தி செய்தார் ஹசி. இந்த ஓவரின் இறுதியில் 114 ரன்களை எடுக்கப்பட்டது. ஹசி 46 பந்துகளில் 72 ன்களை எட்டியிருந்தார்.13வது ஓவரை பாட்டியா வீசினார். பாட்டியாவின் 3வது பந்தில் பவுண்டரி அடித்து 78 ரன்களைத் தொட்டார் ஹசி. இதே ஓவரின் கடைசி பந்தில் மேலும் ஒரு பவுண்டரி அடித்து 83 ரன்களை எட்டினார். 13வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 127ரன்களைக்குவித்தது சென்னை.

100வது சிக்சரை எட்டிய ரெய்னா

14வது ஓவரை நரின் வீசினார். அவரது முதல் பந்தை ரெய்னா சிக்சருக்கு அனுப்பி வைத்து தமது அதிரடி ஆட்டத்துக்கு சுழி போட்டார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 100வது சிக்சரை ரெய்னா எட்டினார். இதே ஓவரின் கடைசி பந்தில் ஒரு பவுண்டரியைத் தட்டினார் ரெய்னா. . 14வது ஓவரின் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்டியது.

சதம் வாய்ப்பு நழுவியது- 95 ரன்னில் ஹசி அவுட்

15வது ஓவரை யூசுப் ஃபதான் வீசினார். 15வது ஓவரின் கடைசி பந்தில் அற்புதமான சிக்சரை ஹசி தூக்கி அடிக்க சென்னை அணி 151 ரன்களை எட்டியது. 15வது ஓவரின் முடிவில் சென்னை அணி 1விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.16வது ஓவரின் 3வது பந்தில் ரெய்னா அழகான பவுண்டரி அடித்தார்.இந்த ஓவரின் 5வது பந்தில் 95 ரன்களை எடுத்திருந்த ஹசி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 95 ரன்களை எடுத்திருந்தார். இதனால் அவரது சதம் வாய்ப்பு நழுவியது. 59 பந்துகளில் 95 ரன்களை எடுத்திருந்தார் ஹசி. இதில் 11 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். களத்தில் இருந்த ரெய்னாவுடன் கேப்டன் டோணி இணைந்து கொண்டார்.

கடைசி 4 ஓவர்கள்...

17வது ஓவரை காலிஸ் வீசினார். அவரது முதல் பந்தை பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் ரெய்னா. இந்த ஓவரின் முடிவில் சென்னை அணி 168 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் டோணி 3 பந்துகளை எதிர்கொண்டு ரன் கணக்கைத் தொடங்காமல் இருந்தார். ரெய்னாவோ 17 பந்துகளில் 32 பந்துகள் எடுத்திருந்தார். 18வது ஓவரை லக்ஷ்மிபதி பாலாஜி வீசினார். இவரது முதல் பந்தில் சிங்கிள் ரன் அடித்து டோணி தனது ரன் கணக்கைத் தொடங்கினார். அப்பாடா! என்று ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கடைசி பந்தில் ஒரு பவுண்டரியை அடித்தார் டோணி. 18வது ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது. கடைசி 2 ஓவரானாலும் டோணி, ரெய்னா என அடித்து ஆடக் கூடிய வீரர்கள் மட்டுமின்றி விக்கெட்டுகளும் கைவசம் இருப்பதால் சென்னை அணி 200 ரன்களைக் கடக்க வாய்ப்பிருப்பதாகவே ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

200 ரன்களை நோக்கி...

19வது ஓவரை காலிஸ் வீசினார். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அமையாமல் சிங்கிள் ரன்களே எடுத்துக் கொண்டிருந்தனர் சென்னை வீரர்கள்.இந்த ஆதங்கத்தைப் போக்கும் வகையில் 5வது பந்தை பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் ரெய்னா. 19வது ஓவரின் முடிவில் சென்னை அணி 188 ரன்களை எடுத்தது. இறுதி ஓவரை பாலாஜி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரெய்னா ரன் அவுட் ஆனார். அவர் 25 பநதில் 44 ரன்களை எடுத்திருந்தார். இதில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் அடங்கும். அவரது அரை சத வாய்ப்பு நழுவியது. டோணியுடன் ஜடேஜா இணைந்தார். 5வது பந்தில் 194 ரன்களை எடுத்திருந்தது சென்னை அணி. கடைசி பந்தை எதிர்கொண்ட டோணி அற்புதமான ஒரு சிக்சர் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்களை எட்டியது.சாந்தை இணையம்
சென்னை அணி 20வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. கேப்டன் டோணி 12 பந்துகளில் 18 ரன்களுடனும் ஜடேஜா 1 பந்தில் 1 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இதனால் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கொல்கத்தா பேட்டிங்- நான்சென்ஸாக பந்து வீசிய நன்னெஸ்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிஸ்லாவும் கேப்டன் காம்பீரும் பந்துவீசினர். சென்னை அணியின் நன்னெஸ் பந்துவிசீனார். அதை கேப்டன் டோணி பிடிககாமல் விட பவுண்டரிக்குப் போனதால் 5 எக்ஸ்ட்ரா ரன்களைக் கொடுத்தது சென்னை அணி.அடுத்த பந்தை நோ பாலா நன்னெஸ் போட 6 ரன்களைஅடிககாமலே எடுத்தது சென்னை அணி. மீண்டும் பந்துவீச அதுவும் பைஸாகிப் போனது. முதல் பந்திலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 10 ரன்களை வாரிக் கொடுத்தது சென்னை அணி. இந்த ஓவரின் முடிவில் காம்பீரும் பிஸ்லாவும் அடித்த ரன்கள் என்னவோ 6 தான்! ஆனாக் கேவலமாக பந்து வீசிய நன்னெஸ்தான் 12 ரன்களை எக்ஸ்ட்ராவாக கொடுத்தார். மொத்தம் 18 ரன்களை எடுத்தது முதல் ஓவரில்! முதல் ஓவரில் வாரி இறைத்ததை ஈடுகட்டியாக வேண்டிய நிலை சென்னை அணிக்கு இருந்தது. நன்னெஸ் முதல் சில போட்டிகளில் இப்படி கொடைவள்ளலாக விளங்கியதால் பல போட்டிகளில் அவர் நீக்கப்பட்டிருந்தார். இன்று மீண்டும் கேவலமாக பந்து வீசினார்.

3வது ஓவரில் காம்பீர் அவுட்!

2வது ஓவரை மொஹித் சர்மா வீசினார். முதல் 2 பந்துகளில் ரன்னைக் கொடுக்காமல் பந்து வீசினார் மொஹித் சர்மா. ஆனால் அவரது 3 வது பந்தை பிஸ்லா பவுண்டரிக்குப் பறக்கவிட்டார். இந்த ஓவரின் முடிவில் 24 ரன்களை எடுத்திருந்தது சென்னை அணி. 3வது ஓவரை மோரிஸ் வீசினார். அவரது முதல் பந்தில் பவுண்டரிக்கு தட்டிவிட்டார் காம்பீர். 3வது பந்தையும் மீண்டும் பவுண்டரிக்கு தட்டிவிட்டார். இருப்பினும் அடுத்த பந்தில் காம்பீரை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் மோரீஸ். சென்னை ரசிகர்களுக்கு இது சற்றே ஆறுதலாக இருந்தது. காம்பீர் 8 பந்துகளில்14 ரன்களை எடுத்திருந்தார். இதில் 3 பவுண்டரிகள் அடங்கும். 6 ரன்கள் எடுத்திருந்த பிஸ்லாவுடன் மெக்கல்லம் இணைந்து கொண்டார். 3வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 32ரன்களை எடுத்தது கொல்கத்தா.

ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள்- 5 ஓவர் முடிவில் 51/1

4வது ஓவரை மொஹித் சர்மா வீசினார். அற்புதமாக வீசப்பட்ட இந்த ஓவரில் கொல்கத்தா வீரர்களால் ஒரே ஒருரன்தான் எடுக்க முடிந்தது. தொடக்க வீரரில் சென்னை அணியின் நான்சென்ஸ் வீசிய கேவலமான பந்துவீச்சால் எகிறிப் போன கொல்கத்தாவின் ரன்ரேட்டை குறைத்தாக வேண்டிய நெருக்கடி சென்னை பந்துவீச்சாளர்களுக்கு இருந்தது. ஆனால் 5வது ஓவரை மோரிஸ் மீண்டும் வீச முதல் 3 பந்துகளை பிஸ்லா 'ஹாட்ரிக்' பவுண்டரியாக பறக்கவிட்டார். கடைசி பந்தும் பவுண்டரிக்குப் பறக்க5வது ஓவரின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 51ரன்களைக் குவித்தது. இந்த ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகள் விளாசப்பட்டன.
மெக்கல்லம் அவுட்
6வது ஓவரை மொஹித் சர்மா வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட மெக்கல்லம் அவுட் ஆனார். அவர் 7பந்துகளில் 6 ரன்களை எடுத்திருந்தார். இந்த ஓவரின் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் இருந்த பிஸ்லாவுடன் காலிஸ் இணைந்து கொண்டார்.

கொல்கத்தா 10 ஓவரில் 85/2

மீண்டும் 7வது ஓவரை நன்னெஸ் பந்து வீசினார். கொஞ்சம் ஆறுதல் தரும் வகையில் இந்த ஓவரில் 4 ரன்களையே கொடுத்திருந்தார் நன்னெஸ். 8வது ஓவரை மொஹித் சஸ்ர்மா வீசினார். இந்த ஓவரிலும் கொல்கத்தாவின் ரன் குவிப்பு வேகம் சற்றே மட்டுப்படுத்தப்பட்டது. 8வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களை எடுத்தது கொல்கத்தா. 9வது ஓவரை ஜடேஜா வீசினார். ஜடேஜா 4 ரன்களையே கொடுத்திருந்ததால் கொல்கத்தாவின் ரன் ரேட் விகிதம் மெதுமெதுவாக குறையத் தொடங்கியது. 9வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்களை எடுத்தது கொல்கத்தா. கொல்கத்தாவின் பிஸ்லா 33 பந்துகளில் 36 ரன்களை எடுத்திருந்தார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். 10வது ஓவரை அஸ்வின் வீசினார். அஸ்வினின் 4 வது பந்தை காலிஸ் தூக்கி அடிக்க அது ரெய்னாவின் கையில் பட்டு தவறி விழுந்தது. அஸ்வினின் கடைசி பந்தை பிஸ்லா அதிரடியாக சிக்சருக்கு அனுப்பி வைத்தார். 10வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்களை எட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

ரன் அவுட் குழப்பம்

11வது ஓவரை ஜடேஜா வீச அவரது முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார் காலிஸ்.இந்த ஓவரில் கூடுதலாக 9 ரன்கள் எடுக்கப்பட்டன. 12வது ஓவரை அஸ்வின் வீச காலிஸ் எதிர்கொண்டார். அப்போது ஒரு ரன் அடிக்கப்பட்டது. பிஸ்லா கிரீஸுக்கு வரும் முன்பு ஸ்டம்ப் அவுட் ஆனது என்று டோணி வாதிட நீண்ட நேர பரிசீலனைக்குப் பின்னர் நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது. கொல்கத்தாவின் பிஸ்லா 39 பந்துகளில் 44 ரன்களுடன் அரைசதம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். 12வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 99 ரன்களை எட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

கொல்கத்தா 99/ 3 -பிஸ்லா அரைசதம்

13வது ஓவரை பிராவோ வீசினார். அவரது 2வது பந்தை எதிர்கொண்ட காலிஸ் தூக்கி அடிக்க அது கேட்ச் ஆனது. காலிஸ் 20 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்களை அடித்திருந்தார். இதில் ஒரு சிக்சர் அடங்கும். அரைசதம் நோக்கிய பிஸ்லாவுடன் மோர்கன் இணைந்து கொண்டார்.அடுத்த பந்தில் ஒரு ரன் அடிக்க கொல்கத்தா அணி 100 ரன்களை எட்டியது. இந்த ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களை எட்டியது கொல்கத்தா அணி. 42 பந்துகளில் 94 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையை எதிர்நோக்கியிருந்தது கொல்கத்தா அணி.14வது ஓவரை அஸ்வின் வீசினார். அவரது பந்தில் பவுண்டரி அடித்த பிஸ்லா அரைசதத்தைக் கடந்தார். இது ஐபிஎல் போட்டிகளில் பிஸ்லா அடித்த 3வது அரைசதமாகும். அஸ்வினின் 2வது பநதையும் பவுண்டரிக்குத் தட்டிவிட்டார். இதனால் கொல்கத்தாவின் ஸ்கோர் விறுவிறுவென உயரத் தொடங்கியது. 14வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களைக் குவித்தது கொல்கத்தா. 36 பந்துகளில் 82 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
15வது ஓவரை பிராவோ மீண்டும் வீசினார். இந்த ஓவரின் 5வது பந்தில் மோர்கன் அடித்த பந்தை அற்புதமாக கீழே விழுந்து தடுத்தார் பிராவோ. அவரது கையை மீறி சென்ற பந்து அவரது முகத்தை பதம் பார்த்துவிட்டுப் போனது. இதனால் பிராவோ வலியால் துடித்தார். பின்னர் மருத்துவர்கள் முதலுதவி அளிக்க கடைசி பந்தை வீசினார். இந்த ஓவரின் முடிவில் 126 ரன்களை எடுத்தது கொல்கத்தா.

கடைசி 5 ஓவர்கள்....

16வது ஓவரை ரன் கொடையாளி நன்னெஸ் வீசினார். மோர்கன் அடித்த பந்தை அஸ்வின் கேட்ச் பிடிக்க தவறிவிட்டார். 3வது பந்தில் பவுண்டரி அடிக்க 27 பந்தில் 70 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை உருவானது... அடுத்த பந்தில் ஒரு ரன் அடிக்கப்பட்டது. நன்னெஸின் கடைசி பந்தை சிக்சருக்கு பறக்கவிடகொல்கத்தா அணி 24 பந்தில் 63 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பரபரப்பான நிலை உருவானது. 16வது ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எட்டியது கொல்கத்தா.

இலக்கை நோக்கிய சேஸிங்-

17வது ஓவரில் பிராவோ வீசிய பந்தை மெனக்கெடாமல் பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் பிஸ்லா.5வது பந்தையும் அழகாக பவுண்டரிக்குத் திருப்பினார் பிஸ்லா. இந்த ஓவரின் முடிவில் 151 ரன்களைத் தொட்டது.
ஒரு ஓவரில் 21 ரன்கள் கொடுத்த சென்னை
எஞ்சிய 3 ஓவரில் 50 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 18வது ஓவரை நன்னெஸ் வீச அவரது பந்துகள் சிக்சருக்கும் பவுண்டரிக்கும் பறந்தது. இந்த ஒரு ஓவரில் மட்டுமே 21 ரன்கள் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.18வது ஓவரின் முடிவில் 172 ரன்களை எடுத்தது. 12 பந்தில் 29 பந்துகள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 19வது ஓவரை வீசினார் பிராவோ. அவரது முதல் பந்து பவுண்டரிக்குப் போனது. 3வது பந்தையும் பிஸ்லா அடித்தார். அவர் ஹசியால் அபாரமாக ரன் அவுட் செய்யப்பட்டர். பிஸ்லா 92 ரன்களை எடுத்திருந்தார். ஐபிஎல் போட்டிகளில் பிஸ்லா அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது. அவர் 61 பந்துகளில் 92 ரன்களை எட்டினார். அப்போது 4 விக்கெட் இழப்புக்கு 178ரன்களை கொல்கத்தா எடுத்திருந்தது.
பின்னர் யூசுப் பதான் மோர்கனுடன் இணைந்தார். இந்த ஓவரின் முடிவில் கொல்கத்தா அணி 182 ரன்களை எடுத்திருந்தது. 6 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான நிலை கடைசி ஓவரில் உருவானது.

பரபரப்பான கடைசி ஓவர்

கடைசி ஓவரை சென்னையின் மோரிஸ் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட மோர்கன் ரன் எடுக்கவில்லை. 2வது பந்தை மோர்கன் அடிக்க அதில் ஒரு ரன் அடிக்கப்பட்டது. 3வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 4வது பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படாததால் சென்னை அணியின் வெற்றி உறுதியானது. கடைசி 2 பந்தில் 17 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. 5வது பந்தில் 1 ரன் எடுக்கபட்டது. கடைசி 1 பந்தில் 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் பதான் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க சென்னை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி நேர வெற்றியைப் பெற்றது.20 ஓவர் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை எடுத்தது. அந்த அணியின் மோர்கன் 32 ரன்களுடனும் பதான் 3 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top