மாத்தறை, மொரவக்க, பொருபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இப்பிரதேசத்தில் உள்ள சிறிய ஆறு ஒன்றில் மண் அள்ளச் சென்றவேளையில் இவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று (28) காலை இவரது தந்தையால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர் 26 வயதான இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மொரவக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக