புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



நீர்­கொ­ழும்பு-தூங்­கிக்­ கொண்­டி­ருந்த தனது ஒரு வயதுக் குழந்­தையை அரு­கி­லுள்ள சேற்­றுக்­கு­ழிக்குள் போட்டுக் கொலை செய்­தது தொடர்­பாக குழந்­தையின் தாயையும் பாட்­டி­யையும் இம்­மாதம்
27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்­கும்­படி நீர்­கொ­ழும்பு மஜிஸ்­திரேட் நீதவான் ஏ.எம்.என்.பி. சம­ர­சிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஜா- எல இதி­மிட்­டிய தீப­சிகா கிரா­மத்தைச் சேர்ந்த 22 மற்றும் 42 வய­தா­ன­ இரு பெண்க­ளே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்கப்பட்­ட­வர்­க­ளாவர்.

இக் குழந்­தையை தூங்­கிய நிலையிலேயே வீட்டில் விட்டுவிட்டு அரு­கி­லுள்ள வீடொன்றுக்குச் சென்று திரும்பி வந்தபோது குழந்தையைக் காண­வில்லை என தாய் கந்­தான பொலிஸ் நிலையத்தில் முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.

பொலிசார் மேற்­கொண்ட விசா­ர­ணையில் குழந்­தையின் தாயும் பாட்­டி­யுமே குழந்­தையை கொலை செய்ததாக தெரிய வந்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top