புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அநுராதபுரம், கெக்கிராவ பகுதியில் பாடசாலை மாணவிகள் 11 பேரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர்
கல்கிரியாம பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக சேவையாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

49 வயதான சந்தேகநபர், பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த 8 முதல் 9 வயதுக்குட்பட்ட 11 சிறுமிகளே துஷ்பிர​யோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கல்கிரியாகம பிரதேச பாடசாலையொன்றின் 4ம் வகுப்பு மாணவிகள் 11 பேரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் இன்று (11) நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். குறித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஆசிரியர் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நேற்று (10) மாலை கல்கிரியாகம பொலிஸில் சரணடைந்துள்ளார்.

பாடசாலை முடிந்ததும் மாலை வகுப்பு எனக்கூறி தனது வகுப்பறையில் வைத்து குறித்த ஆசிரியர் மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து வெளியில் யாருக்கும் சொல்லக் கூடாதென ஆசிரியர் மாணவிகளை மிரட்டியும் வந்துள்ளார்.

மாலை வகுப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவி ஒருவரின் வெள்ளை சட்டையில் இரத்தக்கரை காணப்பட்டுள்ளது. இதனை அவதானித்த தாய் அவரிடம் கேள்வி எழுப்பியதை அடுத்து உண்மை அம்பலமாகியது.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நாசகார சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக இவர் மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top