புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சூரிய ஒளி உடலில் பட்டால், ரத்த அழுத்தம் மற்றும் புற்று நோய் குறையும் என லண்டன் எடின்பரோ பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.


மனித உடலுக்கு சூரிய ஒளியால் வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், சூரிய ஒளியால் நமது ரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைட் என்ற ரசாயனம் உற்பத்தி ஆகி ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்கிறது என லண்டன் எடின்பரோ பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து, லண்டன் எடின்பரோ பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் வெல்லர், இந்த ஆய்வுக்காக குறிப்பிட்ட சிலரை புறஊதா கதிர்வீச்சுக்கும், மேலும் சிலர் மின்விளக்கின் ஒளிக்கும் உட்படுத்தப்ட்டுள்ளனர். ஆய்வின் முடிவில், மின்விளக்கின் ஒளிக்கு உட்படுத்தபட்டவர்களை விட புறஊதா கதிர்வீச்சுக்கு உட்படுத்தபட்டவர்களின் ரத்த அழுத்த அளவு கணிசமாக குறைந்திருந்தது தெரியவந்தது.

இந்த ஆய்வின் தொடர்ச்சியாக சூரிய ஒளியால் மாரடைப்பு மற்றும் தோல் புற்றுநோய் ஆகிய நோய்களுக்கு எந்த விதாமான தாக்கங்கள் ஏற்படும் என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top