புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


டென்மார்க்கின் வடக்கு பகுதியில் ஜோரிங் என்ற பகுதியில் 66 வயது முதியவர் ஒருவர் அதிக நாய்களை வளர்த்து வந்துள்ளார்.

அதற்கு அண்டை வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் நாய்கள் வளர்க்க நீதிமன்றம் அவருக்கு தடை விதித்தது.

ஆனால் அதையும் மீறி அவர் நாய்களை வளர்த்து வந்ததால், அவற்றை பறிமுதல் செய்வதற்கு பொலிசார் அவரது வீட்டுக்கு சென்றனர்.

இதனை அறிந்த உடனே அவர் தான் வளர்த்த நாய்களை, வீட்டில் இருந்த பெரிய குளிர்சாதன பெட்டியில்(பிரீசர்) அடைத்து வைத்துள்ளார்.

சோதனையின் போது குளிர்சாதன பெட்டியை பொலிசார் திறந்து பார்த்தனர். அதில் உள்ளே 30 நாய்கள் இறந்த நிலையில் கிடந்தன. அவற்றில் 25 குட்டி நாய்களும் அடங்கும்.

இது குறித்து இவரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். அதற்கு பதிலளித்த அவர் நாய்கள் சத்தமாக குரைத்தன. அதனால் சோதனையின் போது நாய்கள் இருப்பது தெரிந்து விடும் என்பதால் உள்ளே போட்டு அடைத்து வைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top