புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள புதுரோடு பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. ஜவுளி வியாபாரி. கொல்கத்தாவில் வியாபாரம் செய்து வரும் இவரின் முதல் மனைவி இந்திராணி.
இவர்களுக்கு மகள் கவிதா (வயது 25), மகன் வடிவேல் உள்ளனர்.

இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திராணி இறந்த பிறகு கவிதாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டது. இதனால் பிளஸ்-2 படித்த அவர் படிக்காமல் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவரை ராமமூர்த்தி 2-வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு கோகுல் (3) என்ற மகனும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

வியபாரம் விஷயமாக கொல்கத்தா செல்லும் ராமமூர்த்தி மாதம் ஒருமுறையோ அல்லது 2 மாதத்திற்கு ஒரு முறையோ வீட்டிற்கு வருவார்.

கவிதா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு குணமான நிலையில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணமான 3-வது நாளிலேயே கவிதா கணவரை விட்டு பிரிந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த கவிதா 8 மாதமாக பெற்றோருடன் தங்கினார். இதனிடையே மீண்டும் கவிதாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டது.

இதனால் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி விடுவார். பின்னர் சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு கவிதா முன்பு வீட்டை விட்டு சென்றனர்.

பின்னர் திரும்பிய கவிதா கல்லால் சங்கீதாவை தாக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கீதா கவிதாவை தென்னை மரத்தில் சங்கிலியால் கட்டி வைத்து சூடுபோட்டு அடித்ததாக தெரிகிறது.

இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவிதாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி பர்கூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுபற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பின்னர் சங்கீதா, உடந்தையாக இருந்த அவரது தாயார் லட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் கிருஷ்ணகிரி சப்-ஜெயிலில் அடைத்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top