புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

03 வயது சிறுமியை சூடான கத்தியால் தாக்கிய கொம்பனித்தெருவைச் சேர்ந்த பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



சந்தேகநபர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் மாமியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டிற்குச் சென்றிருப்பதுடன் தந்தை கொழும்பிற்கு வெளியே இருப்பதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Top