புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் அந்தரங்க உறுப்பை தனது கையடக்க தொலைபேசிமூலம் படம்மெடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.



கண்டி- மஹியங்கனை பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கால்களுக்கு கீழே கையடக்க தொலைபேசியை வைத்து நபரொருவர் இரகசியமாக படங்களை எடுத்துள்ளார்.

இதை அவதானித்த பெண் சம்பவம் குறித்து உடனடியாக 119 என்ற அவசர பொலிஸ் சேவை பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

பின்னர் குறித்த பஸ்ஸை சுற்றிவளைத்த கண்டி பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதோடு, கையடக்க தொலைபேசியையும் மீட்டுள்ளனர்.
 
Top