ஜப்பான் நாட்டின் கடலோரப் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்த ஆய்வின் படி நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 என பதிவானதாகவும், 115 கி.மீ தொலைவில் உள்ள மோரியோகாவில்
இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக