புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.பஸ்தியன் வீதி தனியார் பேருந்து நிலையப் பிரதேசத்திலுள்ள நடைபாதை வியாபாரிகள் இருவரே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


பதுளையில் உறவினருடன் வாழ்ந்த இந்த சிறுமி, கோபித்துக்கொண்டு தனது தாயைத்தேடி தனியாக கொழும்புக்கு வந்தள்ளார்.

கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தை வந்தடைந்த இந்தச் சிறுமி, தனியாக நிற்பதை கண்ட பஸ்தியன் வீதி நடைபாதை வியாபாரிகள் இருவர், தாயிடம் அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு முச்சக்கர வண்டியில் சிறுமியை ஏற்றிக்கொண்டு கல்கிசையிலிருந்த தனிமையான ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் இன்னொரு சந்தேக நபருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு மறுநாள் காலை வரை இந்தச் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக புறக்கோட்டை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். இந்த சிறுமி முதல் இரண்டு சந்தேக நபர்களையும் அணிவகுப்பில் அடையாளம் காட்டியுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதுவான் உத்தரவிட்டுள்ளார். மூன்றாவது சந்தேக நபரைக் கைதுசெய்வதற்காக காவல்துறையினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top