புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா -குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் ஆகியோரின் பிணங்கள் தண்ணீர்த் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



குன்னூர் மாடல் அவுஸ் பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 29). இவரது கணவர் செந்தில். இவர்களுக்கு மாதவன்(13) என்ற மகனும், திவ்யா (11) என்ற மகளும் உள்ளனர். செந்தில் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்ததால் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தனர். கடந்த 1 வருடத்துக்கு முன்பு செந்தில் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து சுமதி தனது மகன், மகளுடன் குன்னூருக்கு வந்து குடியேறினார்.

பின்னர் குன்னூர் சிம்ஸ் பார்க் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை சுமதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 1 மாதத்துக்கு முன்பு நடந்தது. அப்பகுதியில் அவர்கள் வீடு எடுத்து வசித்து வந்தனர். மாதவன், திவ்யாவும் அவர்களுடனேயே இருந்தனர். ராஜா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பங்களாவில் ஊழியராக பணிபுரிந்தார். 8 நாட்களுக்கு முன்பு ராஜா திடீரென இறந்தார். நோய் காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுமதி விரக்தியுடன் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பிருந்தே சுமதி, மாதவன், திவ்யா ஆகியோரை காணவில்லை. சுமதியின் தாய், தந்தையர் மற்றும் உறவினர்கள் மாடல் அவுஸ் பகுதியில்தான் வசித்து வருகிறார்கள். அவர்கள் மூவரையும் தேடி கிடைக்காததால், குன்னூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top