புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



இன்று அன்னையர் தினமாகும்(10-05-2013)சாந்தை இணையம் அம்மா... இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொணிகளும் ஆயிரமாயிரம். அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த
மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது. உலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் ஏனைய சர்வதேச தினங்களை போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை.

பொதுவாக மே மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமை உலகில் அநேக நாடுகளில் கொண்டாடினாலும் கூட ஒரு சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன. தாயிற்சிறந்த கோவிலுமில்லை... என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியா கம் போன்றவற்றை எடுத்துக் கூறத்தக்க வரிகளாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை.

ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக, வீட்டில் உள்ளோரை பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்தி செல்லும் ஆசானாக... இப்படி இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது.

அத்தகைய தாயை போற்றவே மே மாதத்தின் 2-வது ஞாயிறு அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் உலக மெங்கும் கொண்டாட காரணமாக இருந்த பின்னணி பற்றி நாம் ஒரு சிறிய விளக்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புரான காலத்திலேயே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகர்கின்றன.சாந்தை இணையம்

பண்டைய கால மனிதர்களால் அன்னையர் புராணங்கள் கதையாக வழங்கப்பட்டு வந்தன. இதில் முக்கியமாக பெண் கடவுளான சைபீல் என்ற கடவுள் வணங்கப்பட்டாள். இந்த பெண் தெய்வமே எல்லா கடவுளுக்கும் முழுமுதற்தாய் கடவுளாக அம்மக்களால் வணங்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒருமுறை இந்த முழு முதற்தாய் கடவுளுக்கு பிரிஜியா மக்களால் விழா எடுக்கப்பட்டு வந்தது. இந்த விழாவே அன்னையர்களை மரியாதை செய்யும் முதல் விழா கொண்டாட்டமாக கருதப்படுகிறது.

வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர். ரோமர்களும் வசந்த கால கொண்டாடத்தின் ஒரு பகுதியாக சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். இந்த வழிபாடு என்பது கலை நிகழ்ச்சிகள், வீர விளையாடு சாகசங்கள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறுவதாக அமைந்தது.

ரோமானியர்கள் தங்களது தாய் கடவுளுக்கு பாலடைன் மலையில் கோவில் ஒன்றை எழுப்பினர். ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 15-ந்தேதி 3 நாட்கள் விழா நடத்தினர். விழாவின்போது இக்கடவுளுக்கு பலவிதமான படையல்களும் செய்யப்பட்டன. கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்பு இந்த கொண்டாட்டம் மாதா திருக்கோவிலுக்கு மரியாதை செய்வதாக மாறியது.

ஏசுபிரான் பாலையில் கழித்த 40 நாளை நோன்பு இருந்து கொண்டாடும் விழா- நாட்களில் 4-வது ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தங்கள் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்ட திருக்கோவில்களுக்கு பரிசுகள் கொண்டு வரும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.

மத்திய காலத்தில் தனது தாயை ஒரு குறிப்பிட்ட தினத்தில் அன்பளிப்புகள் வழங்கி கவுரவித்ததாகவும் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நவீன காலத்தில் உலகளாவிய ரீதியில் அன்னையர் தினம் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உருவான வரலாற்றின் பின்னணி பின்வருமாறு அமைந்திருந்தது.

ஜார்விஸ் என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியா மாநிலத்தில் கிராப்டன் என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் பலியாயினர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபக்கமும் சிதறி போயினர்.சாந்தை இணையம் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், அவர்களின் நல்வாழ்க்கைக்கும், சமாதானத்திற்கும், தன் இறுதி மூச்சு வரை அயராது பாடுபட்டு சமூக சேவகியாக வாழ்ந்து 1904-ல் ஜார்விஸ் மறைந்தார். இவரின் மகள் அனாஜார்விஸ் முதன்முதலாக அனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1908-ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார்.சாந்தை இணையம்

தனது அன்னையை பாராட்டி, சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். சமீக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும், அவள் தங்களுக்கு செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கவுரவிக்க வேண்டும் என்று விரும்பினார். இதைத்தொடர்ந்து அனா ஜார்விஸ் 1913-ம் ஆண்டில் தன் பணி நிமித்தம் பென்சில்வேனியா மாநிலத்தில் பிளடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச் சென்ற சமூக சேவையை தன் தனிப்பெரும் கடமையாக கருதி தொடர்ந்தார்.

கஷ்டப்படுகிற வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேர தாக்கி மனம் வெந்து நொந்து சமூகத்தில் ஓரங் கட்டப்பட்டவர்களின் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னை யர்களும் கவுரவிக்கப்பட வேண்டும். எல்லோர் இல்லங்களிலும் அன்றைய தினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென் சில்வேனியா மாநில அரசுக்கு தெரிவித்தார்.

அரசும் அவர் கருத்தை ஏற்று 1913-ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது. மாநில அரசு அங்கீகரித்தாலும் அனாஜார்விஸ் திருப்தி அடையவில்லை. அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளும், வர்த்தக அமைப்புகளுக்கும் ஆயிரக்கணக்கில் கடிதம் எழுதி அமெரிக்கா முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடவும், அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதே வேண்டுகோளை விடுத்தார். இவரின் வேண்டுகோளையும் நியாய தன்மையையும் ஏற்றுக் கொண்ட அமெரிக்க ஜனாதி பதி உட்ரோவில்சன் 1914-ம் ஆண்டு வருடந்தோறும் மே மாதம் 2-ம் ஞாயிற்றுக் கிழமையை அதிகாரப்பூர்வமான அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமா கவும் இருக்கும் என்று அறிவித்து வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை அமெரிக்க காங்கிரசும் ஏற்றுக்கொண்டது. பின்னர் கனடா அரசாங்கமும் அங்கீகரித்தது. அது மட்டுமல்ல 46 நாடுகள், இதே நாளில் அன்னையர் தினம் என அறிவித்து நடை முறைப்படுத்தியது. தனது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து அனாஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாலும் முழு நிறைவு அடையவில்லை. 46 நாடுகளில் மட்டுமல்ல, உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தொடர்ந்து ஈடுபட்டார்.

உலகம் முழுக்க அன்னையர் தினம் அனுசரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னைய போற்றுகிற வாழ்த்துகிற மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்பவேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84-வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்பு தன்னை சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுததினார். அவரது ஆசை இன்று அநேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினம் அன்னைகளுக்கு எல்லாம் அன்னையா திகழ்ந்த அனா ஜார்விஸ் என்பவரின் முயற்சியினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதேநேரம் அனா ஜார்விஸ் திருமணமானவரோ, பிள்ளைகளை பெற்றெடுத்தவரோ இல்லை. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதே உண்மை. அன்னையர் தினத்தில் எமது அன்னையை மட்டுமல்ல, அன்னையர்களின் மற்ற அன்னையர்களையும் மதித்து மகிழ்விக்க வேண்டும். அவர்களுக்காக பிரார்த்தனைகள் செய்ய வேண்டும். மானசீகமான அன்பை வழங்கவேண்டும். அன்னையை மதிப்பது ஒருநாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதன்று.

ஆனாலும் அன்னையர் தினம் என்று குறிக்கப்பட்ட தினத்தில் விசேஷ மதிப்பும், மகிழ்விப்பும் அன்னைக்கு வழங்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்னையர் தினம் தற்போது ஒரு வியாபார தினம் போல மாறிவிட்டது கவலைக்குரியதே. அன்னையர் தினம் வருதவற்கு முன்பு அல்லது அன்னையர்களை கவுரவிக்கவும், மகிழ்விக்கவும் பல நூற்றுக்ணக்கான வியாபார பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு அவற்றை விற்பனை செய்வதிலேயே முழு அளவில் கரிசனை காட்டுவதை அவதானிக்க முடிகிறது.

இவ்விடத்தில் இத்தினத்தை வியாபார பொருளாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும். எதையும் வியாபாரமாக்கி பணம் பண்ணும் அமைப்பு அன்னையர் தினம் அன்று அன்ன¬யின் படம் ஒன்றை பொரித்து கொடி ஒன்றை விற்று பணம் சம்பாதிக்க எத்தனித்தது. இதையறிந்த அனாஜார்விஸ் வெகுண்டெழுந்தார். 1923-ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தார். இதனுடைய நோக்கம் அன்னையர் தினம் சென்டிமெண்ட் நாளாக இருக்கவேண்டுமே அல்லாமல் பணம் திரட்டும் நாளாக இருக்க கூடாது. இத்தகைய வசூலுக்கு தடை விதிக்கவேண்டும் என்று வாதிட்டார். இறுதியில் வெற்றியும் பெற்றார்.

எனவே அன்னையர் தினம் என்பதை உள்ளார்ந்த உணர்வு பூர்வமாக கடை பிடிக்க வேண்டும் என்பதை அனாஜார்விஸ் எதிர்பார்த் தாரே அன்றி அதை ஆடம் பரமாகவும், பணத்தை மையப்படுத்தியதாகவும் இருக்கவேண்டும் என அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது. சாந்தை இணையம் எனவே அன்னையர் தினம் என்பது ஒரு உயரிய தினம். அன்னையரை மகிழ்விக்க நமது சக்திக்கேற்றார்போல் எதை செய்ய முடியுமோ அதை செய்வோம்.

ஏனெனில் அன்னையின் பெருமானத்தை நாம் வழங்கும் அன்பினால் அன்றி பணத் தினால் தீர்மானிக்க முடியாது. அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும், தனது அன்கைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்கவேண்டும் என்று நினைத்து போராடிய அனாஜார்விஸின் உண்மை யான நோக்கத்தை நாம் புரிந்து இத்தினத்தை கொண்டாடுவோம்.





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top