புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

New Brunswick என்ற பகுதியை சேர்ந்த இந்த பெண், கடந்த 2009ம் ஆண்டில் தன்னுடைய குழந்தையை snowbank என்ற இடத்தில் உயிரோடு புதைத்ததாக வந்த தகவலை அடுத்து அந்த இடத்தை தோண்டி குழந்தையின் பிணத்தை கைப்பற்றி சோதனை செய்யப்பட்டது.

பின்னர் பொலிசார் நடத்திய விசாரணையில் தன்னுடைய குழந்தையை உயிரோடு புதைத்ததை ஒப்புக்கொண்டார். அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவரை Moncton provincial court என்ற நீதிமன்றத்தில் பொலிசார் ஆஜர்படுத்தினர். மீண்டும் மே மாதம் 21ம் திகதி ஆஜர்படுத்துமாறும் அதுவரை காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குழந்தையை எந்த காரணத்திற்காக உயிரோடு புதைத்தார், குழந்தையின் பின்னணி என்ன என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.





 
Top