பொலன்னறுவை, மகசென்புரவில பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் நேற்று பகல் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கூரிய ஆயுதங்களினாலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில் மதுகா ஹங்சனி என்ற இந்த 15 வயதுச் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலையுடன் தொடர்புடையோர் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும் இதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொலையுண்ட சிறுமியின் சடலம் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை நேற்று மாலை இடம்பெறவிருந்தது.
இந்தக் கொலை தொடர்பில் விசாரணைகளை பொலன்னறுவைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.