புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய வளத்தாப்பட்டி பிரதேசத்தில் 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 60 வயது வயோதிபர் ஒருவர் இன்று
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை புதிய வளத்தாப்பிட்டி சுனாமி வீட்டுத் திட்டப் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இவ் வயோதிபரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளான குறித்த சிறுமி சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த இவர்கள் சுனாமி அனர்த்தத்தின் பின்னர் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேற்படி சிறுமியின் பெற்றோர் விட்டில் இல்லாத நேரத்தில் இச்சிறுமியை அழைத்த வயோதிபர் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பின்னர் பெற்றோர் சம்பவத்தினை அறிந்ததும் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய வயோதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top