புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பாகிஸ்தானில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் வைத்து கொன்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜராத் மாவட்டத்தின் நவன் கோட் பகுதியை சேர்ந்தவர் சப்தார் ஹூசைன்.

இவரது மகள் இரண்டு வாரத்துக்கு முன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்நிலையில் இந்த பெண்ணின் தோழி சோபியா அமான் என்பவள் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினாள்.

அதில், என் தோழி அவளது தந்தையால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு விஷம் வைத்து கொல்லப்பட்டாள் என குறிப்பிடப்பட்டிருந்தது.


இதனை கண்ட நீதிபதி, குறித்த பெண்ணின் இறப்பு குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.

விசாரணையில், குறித்த தான் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானது குறித்து தாய், பாட்டி, சகோதரனிடம் முறையிட்டுள்ளாள்.

ஆனால் இதனை அவர்கள் நம்ப மறுத்துள்ளனர். எனவே வீட்டை விட்டு வெளியேறிய பெண், உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

இதனையடுத்து வீடு திரும்பிய பெண், கடந்த 2ம் திகதி விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சப்தார் ஹூசனை லாகூர் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top