புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்க கடற்படையில் பணியாற்றி ஓய்வு வெற்ற இராணுவ வீரர் ஒருவர், தற்போது பெண்ணாக மாறியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த கிரிஸ் பேக், அந்நாட்டை சேர்ந்த கடற்படையில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி சமீபத்தில் தான் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் நவீன அறுவை சிகிச்சைகளின் மூலம் தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டுள்ளார்.

மேலும் தன்னுடைய பெயரை கிரிஸ்டினா பேக் என்று மாற்றிக் கொண்டு, த வாரியர் பிரின்சஸ் என்ற தலைப்பில் சுய சரிதமும் எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தில் தன் வாழ்நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ள கிரிஸ், அமெரிக்காவின் 13 முக்கிய போர் நிகழ்வுகளில் பணிபுரிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறு வயது முதலே தன்னை பெண்ணாக உணர்ந்ததாகவும், பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற பயத்திலேயே ஆணாகவே வளர்ந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top