புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. கார்த்தி தற்போது கும்பகோணத்தில் ஆல் இன் ஆல் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். பிறந்த நாள் குறித்து கார்த்தி கூறும் போது ஆல் இன் ஆல் படப்பிடிப்பு
விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. படப்பிடிப்பு அரங்கில் எளிமையாக பிறந்தநாளை கொண்டாடுவேன் என்றார்.

சென்னையில் கார்த்தி ரசிகர்கள் நலத்திட்ட பணிகளுக்கும், ஏழைகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்கின்றனர். வடசென்னையில் கார்த்தி ரசிகர்கள் 1000 பேர் ரத்ததானம் செய்கின்றனர். எழில் நகர் பி.வி. காலனியில் சமபந்தி விருந்து நடக்கிறது. 2 ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது.

திருவள்ளூரில் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கே.இ.ஞானவேல் ராஜா, எஸ்.ஆர். பிரகாஷ்பாபு, எஸ்.ஆர். ரமேஷ் பாபு, ஆ.பரமு, இரா.வீரமணி, எஸ்.ஆர். பிரபு, ப.செல்வம், எஸ்.எல்.குமார் ஆகியோர் செய்துள்ளனர். கார்த்தி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆர்.ஏ.ராஜ், எஸ். நித்யா, எம்.கே.பி.சந்தோஷ், கே.மதன், என்.ஆனந்த், ராக்கெட் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.
 
Top