புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சீனாவில் தகாத உறவின் மூலம் பிறக்கும் குழந்தை மற்றும் பெண் குழந்தைகளை பெற்ற தாயே நிராகரித்து கைவிடும் மனப்பாங்கு பெருகி வருகிறது.


இவ்வகையில், வேண்டாத குழந்தைகளாக கருதப்படும் சிசுக்களை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிவதும், சாக்கடைகளில் வீசிக் கொல்வதும் வாடிக்கையாகி விட்டது.

சீன அரசின் ‘குடும்பத்திற்கு 2 குழந்தைகள் போதும்’ என்ற கட்டுப்பாடும் சிசுக் கொலைகளுக்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

அவ்வகையில், ஜின்ஹுவா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியின் கழிவறை குழாயில் சிக்கியிருந்த ஆண் சிசுவை மீட்புப்படையினர் நேற்று காப்பாற்றியுள்ளனர்.

கழிவறை குழாயின் காற்று போக்கி வழியாக நேற்றிரவு குழந்தையின் அழுகுரல் சத்தத்தை கேட்ட சிலர் உடனடியாக போலீசாருக்கும் மீட்புப்படையினருக்கும் தகவல் அளித்தனர்.

கழிவுநீர் பிளாஸ்டிக் பைப்பை அப்படியே வெட்டி எடுத்த மீட்புப்படையினர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு பைப்பை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த டாக்டர்கள் குழந்தையின் இருப்பிடத்தை கண்டுபிடித்து சாதுர்யமான முறையில் குழாயை வெட்டி எடுத்து குழந்தையை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

பிறந்து சற்று நேரமே ஆன அந்த சிசு, கழிவறையிலேயே பிறந்திருக்கலாம். அல்லது, பிறந்த சிசுவை கழிவறை பீங்கானுக்குள் திணித்து பெற்ற தாயே கொல்ல முயற்சித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

தீவிர சிகிச்சைக்கு பிறகு லூயிஸ்வில்லி ஆஸ்பத்திரியில் வைத்து பராமரிக்கப்படும் அந்த ஆண் குழந்தைக்கு ‘பேபி நம்பர் – 59′ என பெயரிடப்பட்டுள்ளது.

குழந்தை வைக்கப்பட்டுள்ள இன்குபேட்டர் எண்: 59 என்பதால், இன்குபேட்டரின் அடையாளமே குழந்தையின் தற்காலிய பெயராக உள்ளது.

கழிவறை பைப்பில் உயிருக்கு போராடிய பச்சிளம் தளிர் மீட்கப்பட்ட செய்தி உலகெங்கும் உள்ள ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் உலாவரும் வேளையில், குழந்தையின் தாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டனர்.

முதல் கட்டமாக, இச்சம்பவம் பற்றி தகவல் தந்த பெண்ணிடம் இருந்து விசாரணையை தொடங்க விரும்பிய போலீசார், அவரை விசாரித்த போது முன்னுக்கு பின்னாக தகவல்களை அந்த பெண் கூறினார்.

அவர் மீது சந்தேகப்பட்டு வீட்டை சோதனையிட்ட போது சில பொம்மைகளும் ரத்தக்கறை படிந்த ‘டாய்லட் பேப்பர்’களும் சிதறிக் கிடந்தன.

உறவினர்களின் துணை ஏதுமின்றி அந்த வீட்டில் தனியாக வசித்த அந்த 22 வயது பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உனக்கும் குழந்தைக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய நேரிடும் என்று மிரட்டி ‘உரிய’ முறையில் விசாரித்த போது, பொதுமக்கள் எதிர்பாராத – போலீசார் எதிர்பார்த்த உண்மை வெளிப்பட்டது.

காதலனுடனான நெருக்கத்தால் கருத்தரித்த அந்த பெண், கருக்கலைப்பை பற்றி ஆலோசிப்பதிலேயே மாதங்களை கடத்தி வந்துள்ளார்.

‘சரி… கலைத்து விடலாம்’ என்று முடிவெடுத்த போது காலம் கடந்து விட்டிருந்தது. கரு முழுமையாக உரு பெற்றிருந்தது.

இனி கருக்கலைப்பு சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்த அவர், சாத்திய கதவு வீட்டுக்குள்ளேயே பத்து மாதங்களை கழித்துள்ளார்.

பிரசவ வலி ஏற்பட்டதும் கழிவறைக்குள் சென்று தனக்குத்தானே பிரசவம் பார்த்த அவருக்கு கடந்த சனிக்கிழமை பிற்பகலில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அதன் பின்னர், அந்த குழந்தை கழிவறை பீங்கானில் வழுக்கி விழுந்து சிக்கிக் கொண்டதாகவும், காப்பாற்ற முயன்றும் பலனின்றி கழிவறை குழாய் ‘எல்’ வளைவில் சிக்கிக் கொண்டதால் தீயணைப்பு படைக்கு வெளிநபர் போல் புகார் அளித்ததாகவும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அந்த பெண் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த சீன மூதாட்டி ஒருவர் ‘கழிவறை கால்வாயின் அசுத்தத்தை விட இந்த சிசுவை கொல்லத் துணிந்த தாயின் மனம் மிகவும் அசுத்தம் நிறைந்ததாக இருந்திருக்கும்’ என்று வேதனையுடன் கூறியிருந்தார்.

அவரது மன அழகை பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் யாருக்கும் இல்லை என்ற போதிலும் முக அமைப்பையாவது தெரிந்துக் கொள்ளலாம் என முயன்ற போதிலும் அந்த கன்னித்தாயின் புகைப்படத்தை வெளியிட சீன போலீசார் மறுத்து விட்டனர்.

தற்போது அந்த குழந்தையின் தாயார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தீவிர சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறிய குழந்தையை தாய்வழி தாத்தா – பாட்டி ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top