புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோக் சிங் என்பவர், இங்கிலாந்து நாட்டில் தபால்துறையில் வேலை பார்த்து வந்தார். அங்குள்ள பர்மிங்ஹாம் நகரில் தனது
குடும்பத்துடன் வசித்துவந்தார்.

இவர் கடந்த ஏப்ரல் மாதம், பஞ்சாபில் உள்ள உறவினர்களைப் பார்ப்பதற்காக இந்தியா வந்திருந்தார். வந்த இடத்தில், அவரது 10 வயதுடைய மகள் குர்கிரன் கவுர், நீர்சத்து குறைந்து, வறட்சி நோயால் (டிஹைட்ரேஷன்) பாதிக்கப்பட்டாள்.

இதற்கென ஏப்ரல் 2ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, அங்குள்ள மருத்துவ ஊழியர் மருந்து ஒன்றினை ஊசி வழியாக ஏற்றினார். சிறிது நேரத்திற்குள், குர்கிரன் இறந்துபோனாள். பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, சிறுமியின் பிணம் அவளது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இங்கிலாந்திற்குத் திரும்பிச் சென்ற பெற்றோர்கள், மகளுக்கு இறுதிக் காரியங்கள் செய்யும்முன், அங்குள்ள ஒரு மருத்துவமனையில் மற்றொரு பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில் குர்கிரனின் கண்கள் தவிர, மற்ற
உள்உறுப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பிரிட்டிஷ் கவுன்சிலர் நரிந்தர் கவுர் கூனர் மூலம், சிறுமியின் உடல் உறுப்புகளைப் பெற்றுத்தருமாறு இந்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தனது மகளின் இறுதிக்காரியம் முழுமை அடைய வேண்டுமெனில், அவளது உறுப்புகள் அனைத்தும் வேண்டும் என்று குர்கிரனின் தாய் அம்ரித்கவுர் வியாழன் அன்று தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பெண்ணிற்கு போட்ட ஊசிமருந்து குறித்த விபரத்தை டாக்டர்கள் தன்னிடம் தெரிவிக்கவில்லை, மற்ற மருத்துவ செலவுகள் எதற்கும் பணம் வாங்கவில்லை என்றும் அந்தத் தாய் கூறியுள்ளார்.

மேலும் குர்கிரனின் மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. எனவே, தங்களுடைய தவறினை மறைக்க மருத்துவமனை நிர்வாகம் இவ்வாறு செய்திருக்கலாம் என்று அம்ரித் கருதுகின்றார்.

சந்தோக் கவுரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவேண்டும், அவர்கள் இந்தியா வந்திருந்தபோது நடந்த சம்பவம் துக்ககரமானது. இந்நிகழ்ச்சி, இங்கிலாந்தில் உள்ள மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குர்கிரனின் உறுப்புகளைத் திரும்பப் பெறுவது முக்கிய காரியமாகும் என்று கவுன்சிலர் நரிந்தர் கவுர் கூனர் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top