புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தனது வருங்கால கணவன் எப்படி இருக்க வேண்டும் என கற்பனை செய்து ஓவியம் தீட்டிய இங்கிலாந்து பெண்ணுக்கு அவர் கற்பனை செய்தவாறே கணவன் கிடைத்துள்ளார்.


இங்கிலாந்தின் சூர்ரி நகரில் வசிக்கும் ஹலோயிமாயோ என்ற 31 வயது பெண், தனது வருங்கால கணவன் குறித்து கற்பனையாக ஓவியம் ஒன்றை வரைந்தார்.

முகத்தில் தாடி வைத்திருக்கும் அழகிய கணவருடன் தானும் நிற்பது போல ஒரு ஓவியம் வரைந்து தனது படுக்கையறையில் பாதுகாத்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு மைக்கேல் என்பவர் இணையதளத்தில் அறிமுகமாகி இருவரும் நேரில் சந்தித்தபோது அவருடைய கற்பனை கணவரையே நேரில் கண்டு அதிசயித்தார்.

ஓவியம் வரைந்து நான்கு ஆண்டுகள் காத்திருந்த ஹலோயிமாயோவுக்கு கற்பனை கணவன் நிஜமாகவே வந்தது குறித்து பெரும் மகிழ்ச்சியடைந்தார்.

தற்போது இருவரும் திருமணம் செய்து தற்போது இன்பமாக வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top