புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

திடீரென காணாமல் போன டொரண்டோ நகரைச் சேர்ந்த 29 வயது பெண், நேற்று பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டதாக டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் Elliada Araujo என்ற பெண் Dundas Street அருகில் West and Vanauley Walk என்ற இடத்தில் காணாமல் போனதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

நேற்று சனிக்கிழமை மாலை 7 மணியளவில் அவர் பத்திரமாக இருப்பதாகவும், அவருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் அவர் எங்கிருந்து மீட்கப்பட்டார், ஒரு நாள் முழுவதும் அவர் எங்கிருந்தார் என்பதை தெரிவிக்க பொலிஸாரும், அந்த பெண்ணும் மறுத்து விட்டனர்.



 
Top