புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மறைந்த பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜன் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடந்தது. ஆயிரக்கணக்கானோர் அதில் கலந்து கொண்டனர்.

சாகாவரம் படைத்த பல ஆயிரம் பாடல்களைப் பாடிய டிஎம்எஸ் கண் மூடி விட்டார். அவரது மறைவால் உலகத் தமிழர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.

எங்கு பார்த்தாலும் டிஎம்எஸ் பேச்சாகவே உள்ளது. காய்கறிக் கடை, டீக் கடை, கறிக் கடை என்று எந்த இடமாக இருந்தாலும் சாந்தை இணையம் வரை எம்எஸ்ஸின் அவரது பாடல்களையும் பற்றியே பேசியபடி உள்ளனர்.

சென்னையில் உள்ள டிஎம்எஸ்ஸின் வீட்டில் திரைப்படத் துறையினர், அரசியல் துறையினர், பல்துறைப் பிரபலங்கள், ரசிகர்கள் குவி்ந்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.

முதல்வர் ஜெயலலிதா, திமுக த லைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் டிஎம்எஸ்ஸின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இன்று மாலை நாலரை மணியளவில் டிஎம்எஸ்ஸின் வீ்ட்டிலிருந்து இறுதி ஊர்வலம் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தொடங்கியது.

திரையுலகினர், ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வந்து கலந்து கொண்டனர். உடல் தகனம் டிஜிபி அலுவலகம் பின்புறம் உள்ள இடுகாட்டில் நடைபெற்றது .








 
Top