பிரசவத்திற்காக பதுளை பொது வைத்தியசாலைக்குச் சென்ற தாய் மற்றும் அவருடைய சிசு உயிரிழந்த சம்பவத்திற்கு வைத்தியர்களின் கவனயீனமே காரணம் எனதெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
உயிரிழந்த தாய் மற்றும் சிசுவின் இறுதிச் சடங்கு நேற்று (15) மாலை இடம்பெற்றபோதே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதுளை மீகஹகிவுல மற்றும் பலகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மீகஹவுல பிரதேச செயலர் அலுவலகத்தில் கடமையாற்றும் 27 வயதான இளம் தாயும் அவரது சிசுவுமே வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக