புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-டெல்லி காந்தி நகரை சேர்ந்த 5 வயது சிறுமி ஏப்ரல் 15-ம் திகதி காணாமல் போயுள்ளார். குழந்தை காணாமல் போனது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.


இந்நிலையில் நேற்று அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் காணமல் போன குழந்தை உடல் முழுவதும் காயங்களுடன் மயங்கிய நிலையில் மீட்க்கபட்டாள்.

இது குறித்த விசாரணையில், 5 வயது சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் 30 வயது நிரம்பிய நபர் கடத்தி, தொடர்ந்து 2 நாட்களுக்கு அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திருப்பது தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட குழந்தையின் உடலில் பல காயங்கள் இருந்தன. மேலும், அவரது கழுத்தை அறுக்க முயற்சி மேற்கொள்ளபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

அக்குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது.

5 வயது சிறுமிக்கு இத்தகைய கொடூரத்தை செய்த நபரை தேடு முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top