புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகர் வடிவேலு கடந்த இரண்டு வருடமாக புதுப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் பல இயக்குனர்கள் அவரை புறக்கணிக்கவும் செய்தனர்.


அத்துடன் வழக்கு சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது அவற்றில் இருந்து மீண்டுள்ளார்.

அவருக்கு பட வாய்ப்புகளும் வரத் தொடங்கியுள்ளன. இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தில் நடிப்பார் என்று பேச்சு அடிபட்டது.

ஆனால் அதற்கு பதில் தெனாலிராமன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க முடிவாகியுள்ளது. இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். இதில் வடிவேலு இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

வடிவேலு ஜோடியாக நடிக்க கதாநாயகி தெரிவு நடந்தது. தற்போது பில்லா 2 படத்தில் நடித்த பார்வதி ஓமனகுட்டனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆர்தர்வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ஏஜி.எஸ்.என்டர் டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top