புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுவிட்சர்லாந்திலுள்ள பெர்ன் மாநிலத்தில் உள்ள நிடாவு(Nidau) நகரில் 26 வயது துனீஷிய(Tunisian) என்ற இளைஞர் ஒருவர் ஆர் என்ற ஆற்றில் விழுந்த பந்தை எடுக்கப் போய்த் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த ஆற்று நீர் நிடாவு - புரேன்(Nidau-Büren) வாய்க்காலாகப் பிரியும் இடத்தில் இவர் சிக்கியதால் இவரைத் தண்ணீர் வேகமாக இழுத்துச் சென்றுவிட்டது. இந்த வாய்க்கால் நீர் பில் என்ற ஏரியில் போய்ச் சேரும்.

இத்தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் இரண்டு மணிநேரம் இவரைத் தேடியுள்ளனர். 6 மீற்றர் ஆழத்திலிருந்து இவரது உடலைக் கண்டெடுத்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top