புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (38). இவர் தாயிடம் சொத்தை பிரித்து தரும்படி தகராறு செய்துள்ளார். இதை அவரது மாமா
கலைச்செல்வம் (53), அவரது மகன் டில்லி (23) ஆகியோர் தட்டி கேட்டனர்.

அப்போது தனசேகர் பிளேடால் டில்லியின் முகம், கழுத்தில் கீறினார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின் பேரில் ஓட்டேரி எஸ்.ஐ. ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து, தனசேகரை நேற்று கைது செய்தார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top